Wednesday, 24 August 2011

பெட்ரோலும் பொருளாதாரமும்

பெட்ரோலும் பொருளாதாரமும்
                                       சிறப்பான பொருளாதாரம் என்பது
அந்த நாட்டின் விலைவாசியை பொறுத்துதான் அமையும். நாட்டில் மக்களின்  வாங்கும் திறன் அதிகமாகிவிட்டது அதனால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதல்ல பொருளாதாரம். வாங்கும் திறன் எத்தனை சதவீத மக்களை உயர்த்தியிருக்கிறது என்பதை பொறுத்ததே.அரசு ஊழியரையோ, அரசியல்வாதியையோ, மென்பொருள் ஊழியரையோ மையப்படுத்தியே பொருளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.தினக்கூலித் தொழிலளியை கணக்கிலே எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் வாங்கும் திறன் மலிவான தரமில்லாத பொருள்களையே வாங்கும் அளவிற்கு இருக்கிறது இன்றைய விலைவாசி!
                                    ஒரு பொருளின் விலை உற்பத்தி
விலைக்கும் விற்பனை விலைக்கும் கணிசமான அளவு தொடர்பு
இருக்கவேண்டும்.பொருளாதாரம் என்பது ஒரு பொருளை மையப்படுத்தி உள்ளது.சற்று பொருளாதரத்தை பிரித்து பாருங்கள்.

பொருளாதாரம் = பொருள்+ஆதாரம்

பொருளாதாரம் =பொருள்+ஆ+ தாரம்

தாரத்திற்கு சமமான அளவு ஆதாரம் உள்ளதே பொருளாதாரம். நம்  பொருளாதாரத்தை அடகு வைப்பது நமது  தாரத்தை அடகு வைப்பதற்கு சமம்.வரி இல்லை எனில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யமுடியாதுஎன்பது உண்மைதான்.ஆனால் ஒரு பொருளின் மீது உள்ள வரியால் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்ப்படுமாயின் அந்த வரியும் அரசாங்கமும் எதற்கு? பொருளாதார மேதைகள் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது அதனால் விலைவாசி உயர்ந்துவிட்டதுஎன்கிறார்கள். பெட்ரோல் என்ன அந்நிய சக்தியா? அல்லது பாகிஸ்தான் தீவிரவாதியா?அதை ஏன் நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை? நாம் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் வாங்கும்போதும் உற்பத்திவிலைக்கு ஒரு மடங்கு அதிகமாக வரி கொடுத்துவாங்குகிறோம்.

பெட்ரோல் விலையும்  அதன் வரியும்
1 பேரல் கச்சா எண்ணெய்      = 100 டாலர்
1 டாலர்                                    =   45 ரூபாய்
 1  பேரல் இந்தியா மதிப்பில் = 4500 ரூபாய்
 1பேரல் கச்சா எண்ணெய்      =159 லிட்டர்
1 லிட்டர் கச்சாஎண்ணெய் விலை 4500/159  = 30 ரூபாய்
1 லிட்டர் பெட்ரோலின் விற்பனை விலை       = 67 .25 காசு

வரியின் விவரங்கள்
                                              சதவீதம்                     ரூபாய்
exise duty                          = 24.36%                       16.38  காசு
education tax                   = 0.73%                          0.49   காசு
dealer commission          = 1.56%                          1.04   காசு
vat                                      = 8.1%                             5.44   காசு
crude oil custom duty    = 1.63%                           1.09   காசு
petrol custom                  = 2.28%                            1.53  காசு
transportation charge   = 8.92%                            5.99   காசு
         Total                          = 47.58%                          31.96 காசு

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 47.58% அதாவது 31.96 காசு வரியாக சுமந்துதான் நாம் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கமுடிகிறது.
1 பேரல் கச்சா எண்ணையில் கிடைக்கும் முக்கிய பொருட்கள்
பெட்ரோல்                = 72 .5 லிட்டர்                 4875  ரூபாய்
டீசல்                         = 35     லிட்டர்                  1271  ரூபாய்
மண்ணெண்ணெய் = 14.5  லிட்டர்                   435   ரூபாய்
எரிவாயு                   = 6.5    லிட்டர்                   162   ரூபாய்
heavy fuel oil          = 6.6    லிட்டர்                   158   ரூபாய்
 மொத்தம்      = 135  லிட்டர்          6901  ரூபாய்                               
மொத்த விற்பனையின் விலை                   = 6901 ரூ
 ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை   =4500 ரூ 
                                லாபம்   = 2401ரூ
  ஒரு பேரல் கச்சா எண்ணையில் கிடைக்கும் எரிபொருளை விற்பதற்கே 
ரூ 2401லாபம் கிடைக்கிறது. இது இல்லாமல் 24 லிட்டர் ஒரு பேரலுக்கு எரிபொருள் எடுத்து மீதமுள்ள பொருட்கள் கெமிக்கல் பிளான்ட், பெயின்ட் தொழிற்சாலை, டையிங்தொழிற்சாலை  மற்றும் உயவு எண்ணெய் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இதனையும் சேர்த்தால் லாபம் கொள்முதலை நெருங்கிவிடும்.  இப்படி இருக்க பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்று கூறுவது எந்த பள்ளிக்கூடத்தின் கணக்கு என்று புரியவில்லை. இப்படி நம்மிடம் அநியாயமாக கொள்ளை அடிக்கும் பணத்தைதான் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு மானியமாக கொடுக்கிறது. கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட இந்த அரசாங்கம் எப்படி மக்களுக்கு சிறப்பான பொருளாதாரத்தை கொடுக்க முடியும்?
                             
                                   பொதுமக்கள் ஒவ்வொருவர் சட்டை பையிலும் அரசாங்கம் நேரடியாக கொள்ளை அடிக்கிறது . பணத்தை இழந்தவன் புலம்பினால் மட்டும் கிடைத்துவிடாது. மாறாக எதிர்த்து போராடவேண்டும். விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் சிறிதளவு பங்களிப்பு கொடுத்தாலும் போதும் இந்த நிலை மாறிவிடும். இல்லை எனில் உங்களுக்குள்ளே புலம்பிக்கொண்டு மழுங்கையாக இருந்தால் நாளைய சமுதாயம் வறுமையோடு உருவாவதற்கு நீங்களும் தான் ஒரு காரணம். ஒரு தவறை கண்டிக்காமல் இருப்பது அதற்கு நாம் ஆதரவளிப்பதற்கு சமம். இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணருங்கள். சிறப்பான பொருளாதார மாற்றம் வெறும் பேனாமுனையில் மட்டுமே வந்துவிடாது, தெருமுனை புரட்சிகளும்தான் மாற்றத்தை உருவாக்கும். மக்கள் புரட்சி ஒன்றே மாற்றங்களை உருவாக்கும் என்ற  நம்பிக்கையோடு...

No comments:

Post a Comment